Sunday, October 13, 2013

ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவ சமாதி புதுச்சேரி சுதேசி காட்டன் மில் எதிரில் உள்ள கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் உள்ளது. அந்த சமாதி ஒரு வீட்டின் முற்றம் போல் ஆகிவிட்டது.

இங்கு ஒரு மெக்கானிக் கடையின் பக்கத்தில் செல்லும் ஒரு ஒற்றை அடி பாதை வழியாக மட்டுமே சென்று தரிசனம் செய்யும் நிலையில் உள்ளது. இவர் தனிமையில் தன்  சிந்தனையில் மனதை ஒருநிலையில் கட்டுபடுத்தியவர்.

அப்படி கட்டு படுத்தும் பயிற்சிக்காக ஒரு கையில் தன் கட்டை விரலை மண்ணில் வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் இவரை மண்ணுருட்டி சாமிகள் என்று அழைத்தனர். இவர் 1965  ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 -ம் தேதி ஜீவ சமாதி அடைந்தார்.

No comments:

Post a Comment