Sunday, October 13, 2013

ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம்




விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.

ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.

இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக  கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.


 



இங்கு உள்ள படங்கள் சுற்று பிரகாரத்தில் உள்ள படே சாஹிப் ஐயாவின் உருவ சிலைகள் . 
 
படே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும் பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)
படே சாஹிப் ஐயா அவர்களால் வணங்கப்பட்ட சிவன் கோவில்
சிவன் கோவிலுக்கு வெளியில் உள்ள விருட்சத்தின் அடியில் அமைந்து இருக்கும் நாகங்களின் உருவ சிலைகள்.



இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.

No comments:

Post a Comment